ந த்3வேஷ்ட்1யகு1ஶலம் க1ர்ம கு1ஶலே நானுஷஜ்ஜதே1 |

த்1யாகீ3 ஸத்1த்1வஸமாவிஷ்டோ1 மேதா4வீ சி2ன்னஸன்ஶய: ||10||

ந--—இல்லை; த்வேஷ்டி---—வெறுப்பது; அகுஶலம்—--மனத்துக்கொவ்வாத; கர்ம--—வேலை; குஶலே--—மனம் விரும்பிய ஒருவருக்கு; ந—இல்லை; அனுஷஜ்ஜதே--—தேடுவது; த்யாகீ--—செயல்களின் பலனை அனுபவிப்பதற்காக ஆசைகளைத் துறப்பவர்; ஸத்வ——நன்மையின் முறையில்; ஸமாவிஷ்டஹ—-- உடையவர்கள்; மேதா வீ--—புத்திசாலி; சின்ன-ஸன்ஶயஹ--—எந்த சந்தேகமும் இல்லாதவர்கள்

అనువాదం

BG 18.10: மனத்துக்கொவ்வாத வேலையைத் தவிர்க்கவோ அல்லது மனம் விரும்பிய வேலையை தேடவோ விரும்பாதவர்கள் உண்மையாகத் துறந்தவர்கள். அவர்கள் நற்குணத்தின் தரத்தை உடையவர்கள் மற்றும், அவர்களுக்கு வேலையின் தன்மை பற்றி எந்த சந்தேகமும் இல்லை.

వ్యాఖ్యానం

நன்மையின் முறையில் நிலைத்து இருப்பவர்கள் துயரமான ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள்; மற்றும் தங்களுக்கு இணங்கக்கூடிய சூழ்நிலைகள் உடன் இணைந்திருக்க மாட்டார்கள். அவர்கள் எல்லா நிலைகளிலும் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். வாழ்க்கை சரளமாக இருக்கும்போது உற்சாகமாகவோ அல்லது வாழ்க்கை கடினமாக இருக்கும்போது மனச்சோர்வடையவோ இல்லை. கடந்து செல்லும் ஒவ்வொரு தென்றலிலும் அங்கும் இங்கும் வீசப்படும் காய்ந்த இலைகளைப்போலல்லாமல், அவர்கள் கடலில் எழும் மற்றும் விழும் ஒவ்வொரு அலையையும் லாவகமாக சமாளிக்கும் நாணல் போன்றவர்கள். கோபம், பேராசை, பொறாமை அல்லது பற்றுதல் ஆகியவற்றுக்கு அடிபணியாமல், தங்கள் அமைதியைத் தக்க வைத்துக் கொண்டு, நிகழ்வுகளின் அலைகள் தங்களைச் சுற்றி எழுவதையும் விழுவதையும் அவர்கள் பார்க்கிறார்கள்.

பாலகங்காதர திலகர் பகவத் கீதையின் அறிஞர் மற்றும் புகழ்பெற்ற கர்ம யோகி ஆவார். மகாத்மா காந்திக்கு முன்பு, அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தால், பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகிய இரண்டு பதவிகளுக்கு இடையே அவர் எந்த பதவியை தேர்ந்தெடுப்பார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவர் பதிலளித்தார், 'நான் எப்போதும் டிபரென்ஷியல் கால்குலஸ் பற்றி ஒரு புத்தகம் எழுத விரும்பினேன். அதை நிறைவேற்றுவேன்’ என்றார்.

ஒருமுறை, கலவரத்தை ஏற்படுத்தியதற்காக போலீசார் அவரை கைது செய்தனர். அவர் எந்த விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதைக் கண்டுபிடித்து சிறையில் உள்ள அவருக்குத் தெரிவிக்குமாறு அவர் தனது நண்பரிடம் கேட்டுக்கொண்டார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நண்பர் சிறையில் அவரைச் சந்திக்க சென்றபோது, ​​திலகர் சிறையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்.

மற்றொரு முறை, அவர் தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார், அவருடைய மூத்த மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவருடைய எழுத்தர் அவருக்குச் செய்தியைக் கொண்டு வந்தார். உணர்ச்சிவசப்படுவதற்குப் பதிலாக, ஒரு டாக்டரை அழைத்து வரும்படி கூறிவிட்டு தனது வேலையை தொடர்ந்து செய்தார். அரை மணி நேரம் கழித்து அவர் நண்பர் வந்து அதே செய்தியை சொன்னார். அவர், ‘மருத்துவரை பார்க்க வருமாறு அழைத்திருக்கிறேன். நான் வேறு என்ன செய்ய முடியும்?’ என்று கூறினார். கொந்தளிப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அவர் எவ்வாறு அமைதியைத் தக்க வைத்துக் கொண்டார் என்பதை இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. உள்ளார்ந்த உணர்ச்சி அமைதியின் காரணமாக அவரால் தனது செயல்களை தொடர்ந்து செய்ய முடிந்தது; அவர் உணர்ச்சிவசப்பட்டிருந்தால், சிறை அறையில் தூங்கவோ அல்லது அலுவலகத்தில் தனது வேலையில் கவனம் செலுத்தி இருக்கவோ முடியாது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
18. மோக்ஷ ஸன்யாஸ யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency